மானம் கெடுப்பாரை,
அறிவைத்தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த
கடப்பாரை......
வானம் உள்ளவரை...
வையம் உள்ளவரை....
யார்தான் மறப்பார்....
நம் பெரியாரை....
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின்
நினைவு தினம்...
செப்டம்பர் 17 தமிழனின் சுயமரியாதை தந்தை பெரியாரின் பிறந்த நாள்
என்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,என்ன பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர் என்று....
அவருக்கு பெரியாரை தெரியும் அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க வைத்தது ,பதில் சொல்வது பெரியார் பேரனாகிய என் கடமையல்லவா?
நான் அவரிடம் கேட்டேன் சமீபத்தில் விமானவிபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன்,அவர் உடனே இது என்ன கேள்வி சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார். சரி ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.
சரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் ,நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் ஜெயலலிதா என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் கருணாநிதி என்றார்.
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் அந்த பின் இணைப்பு இங்கு இல்லை ஆந்திராவில் இருக்கு .அந்த சாதியை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல் முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடைமையச் செய்வோம் யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறைமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். --
தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் தோழர் செ. சுரேஷ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடைமையச் செய்வோம் யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறைமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். --
தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் தோழர் செ. சுரேஷ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்